Sunday, December 17, 2017

தில்லையடியில் நகுலன் தலைமையில் ACMC களத்தில்..!

தில்லையடியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் சன் ரைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவருமான திரு. நகுலன் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், பாடசாலை உபகரணங்களும்  அன்பளிப்பு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்றாவது வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அத்தோடு இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்டத்திற்கான பாராளமன்ற உறுப்பினர் நவவி ஹாஜியார் அவர்களும், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஷின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி அவர்களும்,அத்தோடு சிறப்பு அதிதியாக புத்தளம் நகரசபையின் AO சபீக் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தில்லையடி பிரதேசத்தில் பல சமூக விடயங்களின் ஆர்வம் காட்டிவரும் நகுலன், தனது சன் ரரைஸ் கழகம் உட்பட பல இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது உரையில் தில்லையடியில் கல்வி, விளையாட்டு தொடர்பான அபிவிருத்திகளை தொடர்ந்து மேட்கொள்ள இருப்பதாகவும்.  தனது சேவைகளை மேற்கொள்ள உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்..









No comments:

Post a Comment