Wednesday, February 22, 2012

தில்லையடியில் இன்று குண்டு வெடிப்பு...!

இன்று சுமார் 2.30 மணியளவில் தில்லையடி உமராபாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் குண்டு ஒன்று வீழ்ந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள ஒரு தென்னைமரத்தில் மோதி அவ்வீட்டுக்குள் வீழ்ந்துள்ளது. இத்தகவல் ஊருக்குள் பரவ இவ்வீட்டின் அருகாமையில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

இந்த தகவல்  பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டதும் உடனே பொலிஸ் விஜயம் செய்தனர். அவர்களிடம் இது பற்றி நாம் விசாரித்த போது இது இலங்கை இராணுவப்படையினது இல்லை என்றும்  இது LTTE பயன்கரவதிகளினதுடையது என்றும் கூறினார். இது சுமார் 50m வரை செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
இதில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்பதும் குறிப்படத்தக்கது.

Tuesday, February 21, 2012

தில்லையடி பாடசாலை மாணவர்கள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு விஜயம்...!

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தில் எதிர்வரும்  27 ஆம், 28 ஆம், 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கண்காட்சிக்காக இன்று மாணவர் குழு ஒன்று நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு விஜயம் செய்தனர்.

அங்கு உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பல விடயங்களை அறிந்து கொண்டனர்.  மேலும், அதே மாதிரியான ஒரு Model ஒன்றும் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.