Wednesday, December 20, 2017

டில்சான் தலைமையில் தில்லையடியில் UNP !


தில்லையடி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும், நீண்ட கால ஐக்கிய தேசிய கட்சி போராளியுமான ஜனாப் டில்சான் புத்தளம் நகர சபை தேர்தலுக்காக தில்லையடி 11ம் வட்டாரத்தில் களம் இறங்க உள்ளார்.

தற்பொழுது புத்தளம் நகர சபைக்கான UNP வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

UNP Team for Puttalam UC - 2018

01. Y.M.Nisthar (ACMC)
02. S.R.M.M.Muhsi
03. A.O. Alikhan
04. Ali Sabri Raheem (ACMC)
05. M.M.Murshid (ACMC)
06. R.M.Faroos
07. M.N.M.Nusky
08. Uthitha Rathnayake
09. Mrs.Sunil
10. Suthu Malli
11. J.Dilshan








Monday, December 18, 2017

தில்லையடி SLFP வேட்பாளராக ஜப்ரின் ஹனீபா நியமனம்!

தில்லையடியில் SLFP யின் தீவிர ஆதரவாளராகும், முன்னால் நகர சபை உருப்பினருமான சதுர்தீன் அவர்களின் விசேட பரிந்துரையின் பேரில் ஜப்ரின் ஹனீபா தில்லையடி 11 ம் வட்டாரத்தில் களம் இறங்குகிறார்..

தில்லையடி சார்பாகவும், பிரதான வேட்பாளராகும் களமிரங்க இருந்த சதுர்தீன் சில சட்ட சிக்கல் காரணமாக வேட்பாளராக முடியாமல் போயிருந்தார்.

இந்நிலையிலே, ஜப்ரின் தெரிவு செய்யபட்டுள்ளார்.. சிறந்த அறிவிப்பாளரும், பல மேடைகளில் பேசி, பேச்சுத்திறமையும் கொண்ட இவர் இத்தேர்தலில் வெற்றி பெருவரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
தகவல் - ஆசாத்




பாலர் பாடசாலை நிகழ்வில் ஜனாப் டில்சான் விசேட அதிதி..!!

தாஹிப் நகர், ஓஸ்மானியா பலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வில் தில்லையடி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் டில்சன் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்..

வருடாந்தம் நடக்கும் இந்நிகழ்வில் டில்சான் உரையாற்றுகையில் ஒரு ஊரின் எழுச்சியில் கல்வி பாரிய பங்கு வகிக்கின்றது. தமது பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் தமது நேரங்ககளை தியாகம் செய்ய வேண்டும் எனவும். 

தில்லயடிக்கான  தனது பத்து வருட அபிவிருத்தி திட்டத்தில் பாலர் பாடசாலையையும் உள்வாங்குவதாக கூறினார்.

தகவல் - நஷ்ஹத்














Sunday, December 17, 2017

தில்லையடியில் நகுலன் தலைமையில் ACMC களத்தில்..!

தில்லையடியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் சன் ரைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவருமான திரு. நகுலன் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், பாடசாலை உபகரணங்களும்  அன்பளிப்பு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்றாவது வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அத்தோடு இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்டத்திற்கான பாராளமன்ற உறுப்பினர் நவவி ஹாஜியார் அவர்களும், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஷின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி அவர்களும்,அத்தோடு சிறப்பு அதிதியாக புத்தளம் நகரசபையின் AO சபீக் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தில்லையடி பிரதேசத்தில் பல சமூக விடயங்களின் ஆர்வம் காட்டிவரும் நகுலன், தனது சன் ரரைஸ் கழகம் உட்பட பல இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது உரையில் தில்லையடியில் கல்வி, விளையாட்டு தொடர்பான அபிவிருத்திகளை தொடர்ந்து மேட்கொள்ள இருப்பதாகவும்.  தனது சேவைகளை மேற்கொள்ள உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்..









Monday, June 15, 2015

நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா.

நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா.

தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் 15/6/2015 இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

கல்வி, விளையாட்டு மற்றும் சகல துறைகளிலும் வளர்ந்து வரும் தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தின் மிக பெரிய பற்றாகுறையாக இருந்தது நூலகதிற்கு ஒரு தனி கட்டிடம் இல்லாமையாக இருந்தது ஆகும். இப்போது வல்ல இறைவனின் அருளால் இந்த குறை இல்லாமல் போவதற்கான சந்தர்பம் கிட்டியுள்ளது.

Thillayadi M.M.V . Photo by Mafas Deen
சுமார் 60 அடி நீளமுள்ள நூலகம் அமைப்பதற்காக இன்று அடிகள் நாட்டப்பட்டது . இதில் கௌரவ அதிதிகளாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளர்  Mr . M.P.S.K. விஜயசிங்க, Mr . J.M. சுரைஸ் (அறிவிருட்சக பணிப்பாளர்), Mrs. ரிசானா அப்துல் ரஹீம் (முல்லை ரிசானா), Mr. R.M.J.A.ஜின்னாஹ் (D.D.E.- Planning), Mr. Z.A.சன்ஹிர் (D.D.E.- Tamil Unit), Mr. A.C.M. மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் ஆசிரியர்கள், S.D.S. , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Thillayadi M.M.V . Photo by Mafas Deen


Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Friday, February 20, 2015

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்.

இலங்கை பரீட்சை திணைக்களம் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கு விண்ணபங்களை கோரியுள்ளது. விண்ணப்பங்கள் யாவும் பாடசாலை அதிபர் ஊடாகவும் மார்ச் 6 திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

* March 6 க்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

*தனியார் மாணவர்கள் இந்த முகவரியை பயன்படுத்தவும்..

Exam Commissionaire General
P.O Box 1503
Colombo
Webssite-  http://www.doenets.lk/exam/index.jsf


Tuesday, February 17, 2015

14 ஏகர் நிலப்பரப்பை தில்லையடி பாடசாலை அதிபர் பொறுப்பெடுத்தார்...


P/ Thillayadi M.M.V.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியருகே, புத்தளம் நகரிலிருந்து தெற்கே 2 KM தூரத்தில் 14 ஏக்கர் பரப்பளவும், 1.05 KM சுற்றளவும் கொண்டு அமைத்துள்ள பிரமாண்டமான நலப்பரப்பு, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானமாகும். இதை சொந்தம் கொண்டாடவும், பங்குபிரிக்கவும் பலர் முனைந்த போதும் தில்லையடி பாடசாலை நலன்விரும்பிகள் மூலம் தடுத்து நிருத்தப்பட்டமை வரலாற்றில் பதியப்பட்ட விடயமாகும். எனினும், ஒரு சில துண்டுகள் பறிபோனதும் கசப்புகுரிய உண்மையாகும்.ஒரே நேரத்தில் சுமார் 3 கிரிக்கெட் போட்டிகளை நடத்த கூடியளவு வசதி கொண்ட இம் மைதானத்தில், தில்லையடியை பொறுத்தளவில், வெள்ளிகிழமைகளில் அதிக மேட்ச்கள் நடத்தப்படுகிறது. அதனால் பாடசாலை மைதானத்தில் சுமார் 150 நபர்களுக்கு மேல் காணப்படுவார்கள். இவர்கள் தண்ணீர் அருந்தவும், ஒய்வு எடுக்கவும் பாடசாலையைப் பயன்படுத்துவர். இதனால் பாடசாலையின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
இதனைக் கட்டுபடுத்துவதற்காக பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு- SDS, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் மைதானத்தை பயன்படுத்துவோர் ஆகியோர் நேற்றிரவு (2015.02.15) கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, மைதானத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு சந்தாப் பணம் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டது.
P/ Thillayadi M.m.v.

இக் கலந்துரையாடலில் உரையாற்றிய தில்லையடி மு.ம.வி. அதிபர் எஸ்.எம். ஹுதைலீன், 'பாடசாலை மைதானத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபராகிய எனக்கு உள்ளது. பாடசாலை மைதானத்தை துஸ்பிரயோகம் பண்ணுவோரை இனம்கண்டால் என்னிடம் கூறுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.

Friday, October 19, 2012

♦♦♦ Being Thankful ♦♦♦


♦♦♦ Being Thankful ♦♦♦

A blind boy sat on the steps of a building with a hat by his feet. He held up a sign which said: “I am blind, please help.”

There were only a few coins in the hat. A man was walking by. He took a few coins from his pocket and dropped them into the hat. He then took the sign, turned it around, and wrote some words. He put the sign back so that everyone who walked by would see the new words. Soon the hat began to fill up. A lot more people were giving money to the blind boy. That afternoon the man who had changed the sign came to see how things were. The boy recognized his footsteps and asked, “Were you the one who changed my sign this morning? What did you write?”

The man said, “I only wrote the truth. I said what you said but in a different way. I wrote: “Today is a beautiful day but I cannot see it.”

Both signs told people that the boy was blind. But the first sign simply said the boy was blind. The second sign told people that they were so lucky that they were not blind.
Should we be surprised that the second sign was more effective?

Moral ♥:

Be thankful for what you have…Be creative. Be innovative. Think differently and positively.
When life gives you a 100 reasons to cry, show life that you have 1000 reasons to smile.

Face your past without regret. Handle your present with confidence. Prepare for the future without fear. Keep the faith and drop the fear. The most beautiful thing is to see a person smiling… And even more beautiful, knows that you are the reason behind it!!!

-Blessed Muslimah

என் கேள்விக்கு இறைவனின் பதில்...!

இது ஒரு நீண்ட கட்டுரை தயவு செய்து மனதால் விரும்பி வாசித்து இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விடயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!

துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும்,அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.

வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.

ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன்,கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி,அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.

அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும்,உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார்.

பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது.

ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:

“அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது.“அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.

திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!”

அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான்.

பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

“இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும்,முடிக்கவும் வேண்டும்.

“என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும்,தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

“துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

“மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்”என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும்,சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

1. நோன்பு துறக்கும்பொழுது.

2. லைலத்துல் கத்ர் இரவு.

3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).

4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.

5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.

6. அரஃபா தினத்தில்.

7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.

9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.

“உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)v 10. சேவல் கூவும் பொழுது.

“சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)

12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.

“ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படி பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள்.

“உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்)

இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது.

“யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்:

1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,

2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,

3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,

“அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்)

ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் பன்னிப் பன்னி மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள்.

ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ,நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி,முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான்.

கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்கு பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டு பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும்.

பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

“உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ)

மனிதனுக்கு பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும்.

இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும்.

இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் பலி

(ஏ.எப்.எப்.ஜெஸீரா,எம்.என்.எம்.ஹிஜாஸ், மும்தாஜ், ஹிரான் பிரியங்கர )

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி நாகவில்லு பகுதியில் இன்று
வெள்ளிக்கிழமை இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவி நாகவில்லு மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த முஹமது நஸார் (வயது 33) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார்.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Friday, September 7, 2012

களத்தில் இறங்கிய ரஷ்யா ! ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு பேரழிவு ஏற்படும்: ரஷியாவின் கடும் எச்சரிக்கை...!


iran rusia usa isrel rocket missile

மாஸ்கோ: அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க ஆதரவோடு ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறி வருகின்றன. அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளதோடு, அந் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் நிறுத்திவிட்டன.
மேலும் பிற நாடுகளும் வாங்கக் கூடாது என்று நிர்பந்தித்து வருகின்றன. ஈரானுக்கு பணம் செலுத்த முடியாத அளவுக்கு சர்வதேச வங்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டன. இதனால், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ஈரானுக்கு பணம் தருவது கூட சிரமமாகிவிட்டது.
இந்தக் காரணங்களால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் மறைமுக உதவியோடு அதன் அணு உலைகள் மீது போர் விமானங்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
ஆனால், தங்கள் மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் நடத்தினால் வளைகுடாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள அமெரிக்கப் படைகள் மீதும் இஸ்ரேல் மீதும் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறி வருகிறது.
மேலும் தங்களது அணு உலைகளில் ஆயுதம் தயாரிக்கவில்லை என்றும், எரிசக்திக்கான ஆய்வுகள் தான் நடப்பதாகவும் ஈரான் கூறி வருகிறது. இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வந்த ரஷ்யா, இப்போது வாய் திறந்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் கூறுகையில்,
அணு உலை விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது வேறு நாடுகளோ தாக்குதல் எதையும் நடத்தக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.
இது போன்ற ராணுவ நடவடிக்கை விவேகமாக இருக்காது என்றும் எச்சரிக்கிறோம். அதையும் மீறி தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கு பகுதியில் அது பேரழிவை ஏற்படுத்தும். அந்த பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அந்தப் பகுதியின் பாதுகாப்பும் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இந்தத் தாக்குதலால் மத்தியக் கிழக்கு நாடுகளையும் தாண்டி சர்வதேச அளவிலும் மாபெரும் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

Friday, August 24, 2012

எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் களத்தில் இராணுவம்...!


எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் களத்தில் இராணுவம்

 

              இலங்கையின் மேற்குக் கரைக்கு 10 கிலோமீட்டர் அப்பால் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை செய்வதற்கு இலங்கை அரசு இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

சைப்ரஸ் நாட்டுக்கு சொந்தமான 15 ஆயிரம் டன் எடைகொண்ட தெர்மோபைலே சியெரா என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக கடந்த வியாழனன்று கடலில் மூழ்கியதிலிருந்து அதிலிருந்து எண்ணெய் கசிந்து வருகிறது.

இந்த எண்ணெய்க் கசிவு பத்து கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்பரப்பில் பரவியுள்ளது.

இந்தக் கப்பலில் 600 டன் எண்ணெய் இருந்தது என்றும் அதில் பெரும்பான்மையான எண்ணெய் வெளியில் எடுக்கப்பட்டுவிட்டதென்றாலும் சுமார் 70 டன் எண்ணெய் எஞ்சியிருந்தது என்றும் கூறப்படுகிறது.

எண்ணெய்த் திட்டுக்களில் பெரும்பான்மையானவை மேற்கு நோக்கி திறந்தக் கடல் பரப்புக்குள்தான் செல்கின்றன என்றாலும், ஒரு சில திட்டுக்கள் நீர்கொழும்பு சுற்றுலா நகரை எட்டிவிட்டதாக இலங்கை அதிகாரிகள் கூறுகிறனர்.

இந்த எண்ணெய்த் திட்டுக்களினால் அப்பகுதியில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், கொழும்புக்கு தெற்கில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா மையமான கல்கிசையின் கடற்கரை பாதிக்கப்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பலில் சென்ற சரக்கான இரும்புக் குழாய்கள் யாருக்கு சொந்தம் என்ற ஒரு தகராறு எழுந்த நிலையில், இலங்கை நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இக்கப்பல் மூன்று ஆண்டுகளுக்கு முன் பிடித்து வைக்கப்பட்டது.
இந்தப் பருவத்தில் கடல் கந்தொளிப்பு இருக்கும் என்பதால், துருப்பிடித்துவரும் இந்தக் கப்பலை இலங்கையின் கிழக்கு கடல்பகுதிக்கு இழுத்துக் கொண்டுபோய் விடலாம் என்ற ஒரு திட்டம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த யோசனையும் தடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கப்பல் மூழ்காமல் தடுக்க முயற்சி எடுத்து வந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் தங்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வரவில்லை என்றும், தாங்கள் சொன்ன யோசனைகளை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தனர்.
(பீபீசி)

Wednesday, February 22, 2012

தில்லையடியில் இன்று குண்டு வெடிப்பு...!

இன்று சுமார் 2.30 மணியளவில் தில்லையடி உமராபாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் குண்டு ஒன்று வீழ்ந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள ஒரு தென்னைமரத்தில் மோதி அவ்வீட்டுக்குள் வீழ்ந்துள்ளது. இத்தகவல் ஊருக்குள் பரவ இவ்வீட்டின் அருகாமையில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

இந்த தகவல்  பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டதும் உடனே பொலிஸ் விஜயம் செய்தனர். அவர்களிடம் இது பற்றி நாம் விசாரித்த போது இது இலங்கை இராணுவப்படையினது இல்லை என்றும்  இது LTTE பயன்கரவதிகளினதுடையது என்றும் கூறினார். இது சுமார் 50m வரை செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
இதில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்பதும் குறிப்படத்தக்கது.